Sunday, November 21, 2010

என்னவனை
எனக்காக படைத்தான் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால்
நீ என்னருகில் இல்லை
உன்னை விட்டு கொடுக்க தெரிந்தவளுக்கு
உன் காதலை விட்டு கொடுக்க தெரியவில்லை
உன்னை ரசித்தேன்,
உன் மனதை ரசித்தேன்,
உன் சிரிப்பை ரசித்தேன்,
உன் அழகை ரசித்தேன்,
உன் பேச்சை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பபடி ரசித்தேன்,
நீ என் அருகில் நெருங்கி வருவதை ரசித்தேன்,
இப்பொழுது
என்னை விட்டு விலகிசெல்வத்தையும் ரசிக்குறேன் .
Tuesday, July 27, 2010
Sunday, May 9, 2010
Wednesday, January 20, 2010
Sunday, December 13, 2009
Sunday, November 22, 2009

என்னை மட்டும் அல்ல
என்னில் இருக்கும்
உன்னின் பிறந்த நாளையும்
மறக்க செய்த
உன் நினைவை காதல் என்று சொல்லுவதா அல்லது
என் சுவாசம் என்பதா........
எது மறக்க வைத்தது நீ சொல்லி தந்த பாடங்களா ...
முதன் முதலாய் பயம் காட்டி தந்த சின்ன அணைப்பா ...
உதடு வழி என் உயிர் பறித்த முதல் முத்தமா ...
என் சுவாசமாய் இருக்கும் உன் நினைவா ...
உன் காந்த விழி பார்வையில் முழுதாய் இழந்தேன் என்னை அதுவா ...
ஆயிரம் விண்மீன்கள் என் மீது கொட்டுவதை போல் உணர்வு தரும்
உன் அழகிய சிரிப்பா ...
என் வாழ்வின் கடைசி எல்லையின் முற்று புள்ளி வரை
நீ வேண்டும் என்ற எனது தவிப்பா ....
Subscribe to:
Posts (Atom)






