
என்னை மட்டும் அல்ல
என்னில் இருக்கும்
உன்னின் பிறந்த நாளையும்
மறக்க செய்த
உன் நினைவை காதல் என்று சொல்லுவதா அல்லது
என் சுவாசம் என்பதா........
எது மறக்க வைத்தது நீ சொல்லி தந்த பாடங்களா ...
முதன் முதலாய் பயம் காட்டி தந்த சின்ன அணைப்பா ...
உதடு வழி என் உயிர் பறித்த முதல் முத்தமா ...
என் சுவாசமாய் இருக்கும் உன் நினைவா ...
உன் காந்த விழி பார்வையில் முழுதாய் இழந்தேன் என்னை அதுவா ...
ஆயிரம் விண்மீன்கள் என் மீது கொட்டுவதை போல் உணர்வு தரும்
உன் அழகிய சிரிப்பா ...
என் வாழ்வின் கடைசி எல்லையின் முற்று புள்ளி வரை
நீ வேண்டும் என்ற எனது தவிப்பா ....

