Sunday, December 13, 2009


வானம்
கீழே விலாமல் தாங்கி நிற்பது
பூமியில் உள்ள காதல்
என்று ஒரு கவிஞன் கூறினான்.
ஆம்!
அது உண்மைதான்,
இனி வரும் காலம்
வானம் தாங்கி நிற்க
நம் காதல் ஒன்றே போதுமே!

Sunday, November 22, 2009


என்னை மட்டும் அல்ல
என்னில் இருக்கும்
உன்னின் பிறந்த நாளையும்
மறக்க செய்த
உன் நினைவை காதல் என்று சொல்லுவதா அல்லது
என் சுவாசம் என்பதா........
எது மறக்க வைத்தது நீ சொல்லி தந்த பாடங்களா ...
முதன் முதலாய் பயம் காட்டி தந்த சின்ன அணைப்பா ...
உதடு வழி என் உயிர் பறித்த முதல் முத்தமா ...
என் சுவாசமாய் இருக்கும் உன் நினைவா ...
உன் காந்த விழி பார்வையில் முழுதாய் இழந்தேன் என்னை அதுவா ...
ஆயிரம் விண்மீன்கள் என் மீது கொட்டுவதை போல் உணர்வு தரும்
உன் அழகிய சிரிப்பா ...
என் வாழ்வின் கடைசி எல்லையின் முற்று புள்ளி வரை
நீ வேண்டும் என்ற எனது தவிப்பா ....

Friday, November 20, 2009


பேசும் ரோஜா
உன் உதட்கள்
என்று வர்ணித்ததும்
நீ தான்
அந்த உதடுகளுக்கு
உன் அழகை காட்டி
பற்கள் முளைக்க வைத்ததும்
நீ தான்.......

Monday, November 16, 2009

காத்திருந்து பார்

காக்க வைத்து பார்
அதன் சுகம் உனக்கு தெரியும்
கொஞ்சம் .....
காத்து இருந்து பார்
அதன் வலி உனக்கு புரியும் ....

Monday, September 14, 2009


உன் முகம் நான் பார்க்க

உன் தேடல் என்னை இழுக்க

ஏன் இந்த இன்பம் தெரியலையே

அந்த சின்ன வேளையில்

என் மனது தவிக்குதே

உன் பார்வை என் மீது பட வேண்டும் என்று

Thursday, September 10, 2009

உன் நினைவு


இன்னும் எத்தனை ஜென்மங்கள் என்னை இழுத்து செல்லுமோ ?......

Wednesday, September 9, 2009


கடலின் மடியில்

தவழும் சூரியனின்

அந்த ...

அந்தி வான அழகை காண

நூறு கண்கள் வேண்டும்

நான்

உன் மார்பின்

அழகில் உறங்க

கோடி ஜென்மம் வேண்டும்

Tuesday, September 1, 2009


உதிரும் பூக்கள் கூட சிரிக்கிறது

நாம் ஏன் அழவேண்டும்

அழியாத நம் காதல்

சந்திக்க முடியாத சில நாட்களுக்காக

நாம் சந்தித்த நாட்களில்

நம் விழி பேசிய அந்த சில நிமிடங்கள் போதும்

நாம் சந்திக்க முடியாத

அந்த பல நாட்களுக்கு ....

Saturday, August 22, 2009

நிமிடம்


உன் நகம்

என்மேல் கோலம் போடும்

அந்த நொடி

என்னை பேச விடாமல்

உன் இதழ் அணை போடும்

அந்த நொடி

உன் அணைப்பு என் கைகளுக்கு

விலங்காய் அமையும்

அந்த நொடி

நீ கொஞ்சம் தின்னும்

கொஞ்சம் என்னை கொஞ்சும்

அந்த நொடி

காற்றே தீர்ந்தாலும்

உன் நினைவே சுவசமாகும்

அந்த நொடி

நாம் சேர்ந்து வாழ்வதாக

கனவு வரும்

அந்த நொடி

இவை அனைத்தும்

நடக்காது என்றுதெரிந்தாலும்

ஒரு சின்ன பேராசை

புற்கள் கூட

பூமியை கிழித்து கொண்டு

வெளி வருகிறதே

நாம் சேரும் நாள் வராதோ என்று

நான் காத்து இருக்கும்

அந்த நொடி

இவை அனைத்தும்

என் வாழ் நாளில்

மறக்க முடியாத

நிமிடங்கள் .

Wednesday, August 12, 2009

என்னுள் நி வந்ததும்


இரண்டாம் கருவறையாய்


என்னுள் நி வந்ததும்


உன்னை நினைக்கும்


ஒவ்வொரு நிமிடமும்


என்னை நான் இழந்தேன்


மிதி வண்டி பழகிடும் சிறுமியாய்


சிறு சிறு தவறுகள் செய்தேன்


நான் குடிக்கும் தண்ணிருக்கும்


சுவை வந்தது


என்னுள் நி வந்ததால்.


Thursday, July 30, 2009

தொலைபேசி முத்தம்


பொதுவாக கொடுக்கும் முத்தங்கள்

இதழ்ல்களை இராமக்கி

காது மடல்களை உலர வைக்கும்

ஆனால்.....

நீ தொலைபேசி உடனே

கொடுத்த முத்தம்

காது மடல்களை இரமாகி

இதழ்ல்களை உலர வைத்தது.

Wednesday, July 29, 2009

உலகிற்கு தெரியுமா?



தூக்கத்துக்கு தெரியும் !


கனவுகளில் நீ மட்டும் வருகிறாய் என ,


இருட்டுக்கு தெரியும் !


நான் !


உன் காந்த கரு விழி வெளிச்சத்தில்


நடக்கிறேன் என்று ,


இந்த உலகிற்கு தெரியுமா ?


நம் இருவரின் உயிரும்


பைத்தியமாய் அழைக்கிறது என்று .

Wednesday, June 24, 2009

சொர்க்கம் அருகில் இல்லை



எல்லோரும் அருகில் இருந்தும்


என் கண் முன்னே !


உன் பார்வை மட்டுமே.!


என் காதுகளோ !


உன் குரலை மட்டுமே


அனுமதிக்குறது.


என் விரல்கள்


உனக்காக மட்டுமே


வேலை செய்கிறது .!


என் உயிர்


உன்னை மட்டுமே


சுற்றி வருகிறது .


என் நினைவில்


நி ! மட்டுமே


நிறைந்து நிற்கிறாய் !


உன் அணைப்பில் ,


நான் சொர்க்கம் காணுவேன் .


ஆனால் !


அந்த சொர்க்கம்


என் அருகில்


இல்லையே ?!

Thursday, June 18, 2009

தனிமை தவிப்புடன் நான்

வலியுடனே நீ அங்கே !
தனிமையிலே தவிப்புடன் நான் இங்கே!
உன் அருகே நான் இருந்து வலி போக்கவில்லை
அதற்க்கு தண்டனையா ?
என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதது.
மஞ்சத்தில் இன்பத்தில் மட்டும் அல்ல
உன்
துன்பத்திலும் வலியிலும் பகிர்ந்து கொள்ளவும் தானடா நான் !
அதை ஏன் மறந்தாய் !
என்னை தனிமையிலே தவிக்க விட்டாய் !
இனி இதுபோல் செய்யாதடா மச்சான்
ப்ளீஸ் .............

நினைவு

என் நினைவாக!
அவளிடம் ஒன்னும் இல்லை,
ஆனால் !
என்னிடம் !
அவள் நினைவை தவிர ,
வேற ஒன்றுமில்லை.

Tuesday, June 16, 2009

என்னை அடிக்காமல் அழ வைப்பது
நீ மட்டும் தான் !
என்னை காய படுத்தாமல்
வலிகள் தருவது
நீ மட்டும் தான்!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும் தான் !
நான் வாழ்தலும் வீழ்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும் தான்!

Sunday, June 7, 2009

வலி


உன் கரு விழி
இதய துடிப்பாய் மாறி
துடிக்கும் அந்த நொடியில்
நான்!
உன் அருகில்
உனது மனைவியின் மணவரை தோழியாய்!