Saturday, August 22, 2009

நிமிடம்


உன் நகம்

என்மேல் கோலம் போடும்

அந்த நொடி

என்னை பேச விடாமல்

உன் இதழ் அணை போடும்

அந்த நொடி

உன் அணைப்பு என் கைகளுக்கு

விலங்காய் அமையும்

அந்த நொடி

நீ கொஞ்சம் தின்னும்

கொஞ்சம் என்னை கொஞ்சும்

அந்த நொடி

காற்றே தீர்ந்தாலும்

உன் நினைவே சுவசமாகும்

அந்த நொடி

நாம் சேர்ந்து வாழ்வதாக

கனவு வரும்

அந்த நொடி

இவை அனைத்தும்

நடக்காது என்றுதெரிந்தாலும்

ஒரு சின்ன பேராசை

புற்கள் கூட

பூமியை கிழித்து கொண்டு

வெளி வருகிறதே

நாம் சேரும் நாள் வராதோ என்று

நான் காத்து இருக்கும்

அந்த நொடி

இவை அனைத்தும்

என் வாழ் நாளில்

மறக்க முடியாத

நிமிடங்கள் .